லால்பேட்டை மினா தெருவில் இருக்கும் இமாம் புஹாரி நர்சரி & பிரைமரி பள்ளியில் 63வது குடியரசு தினம் பள்ளி வளாகத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
பள்ளியின் தாளாளர் மெளலவி எம்.ஒய்.முஹம்மது அன்சாரி மன்பஈ தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.
அதைத் தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் ஹாஜி அனீசுர் ரஹ்மான்,நிஃமதுல்லா,முஹம்மது ரியாஜ்,அப்துல் ரவூப் உட்பட பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.முஃபீத் அஹ்மது ஒருங்கிணைத்தார்,பள்ளியின் ஆசிரிய,ஆசிரியைகள் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.
0 comments:
Post a Comment